மழை இல்லாத காரணத்தால் பனாமா கால்வாயில் சரக்கு கப்பல்கள் செல்வதை அடுத்த ஆண்டுக்கு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குறைவாக இருப்பதால், ஒரு நாளைக்கு 32 சரக்கு கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். மற்ற கப்பல்கள் கால்வாயை கடக்க 19 நாட்கள் காத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். எல் நினோ நிகழ்வே வறட்சிக்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பனாமா கால்வாய் வழியாக செல்ல ஒவ்வொரு கப்பலுக்கும் 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால், சரக்கு போக்குவரத்துக்கு நன்னீரை நம்பியே உள்ளது.போக்குவரத்து துண்டிக்கப்படுவதால், கப்பல் நிறுவனங்கள் வேறு வழியை தேடும் என, பனாமா கால்வாய் நடத்துவோர் கவலையடைந்துள்ளனர். 82 கி.மீ நீளமுள்ள பனாமா கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து பசிபிக் பெருங்கடலுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்கும் நீர்வழிப்பாதையாகும்.