பங்களாதேஷில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் பங்களாதேஷின் குஷ்டியாவில் உள்ள ரவீந்திர சுதிபாரியில் "சின்னபோத்ரா: பத்மா பரே ரவீந்திரநாத்" என்ற ஆவணப்படத்தின் பிரீமியர் காட்சியை ஏற்பாடு செய்தது. பங்களாதேஷ் அரசாங்கத்தின் தொல்லியல் துறையுடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் தனது மருமகள் இந்திரா தேவிக்கு 1889-1895 க்கு இடையில் குஷ்டியாவில் உள்ள சுத்திபாரியில் தங்கியிருந்தபோது எழுதிய கடிதங்களின் தொகுப்பு, டாக்டர். சஞ்சல் கான் இயக்கிய இந்த ஆவணப் படம். நிகழ்ச்சியில் பேசிய வங்கதேசத்துக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரனய் வர்மா, இந்தியாவின் 'ஜனகனமன' மற்றும் பங்களாதேஷின் 'அமர் ஷோனர் பங்களா' ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்களை இயற்றிய அரிய பெருமை ரவீந்திரநாத் தாகூருக்கு கிடைத்ததாக தெரிவித்தார்.