பாலஸ்தீனத்தின் காசாவை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் 235 இந்திய பிரஜைகளுடன் ஆபரேஷன் அஜய்யின் இரண்டாவது விமானம் புது தில்லி வந்தடைந்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியர்களின் இரண்டாவது குழுவை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வரவேற்றார்.ஆபரேஷன் அஜய்யின் கீழ் இந்திய அரசும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து சுமூகமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியதை பாராட்டுவதாக மத்திய அமைச்சர் கூறினார்.இஸ்ரேலில் சிக்கித் தவித்த 212 இந்தியர்கள் ஆபரேஷன் அஜய்யின் கீழ் நேற்று டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டது.