கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர தகராறு காரணமாக 2023 ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களுக்கான படிப்பு அனுமதி எண்ணிக்கை குறைவதாக குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்தார். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியர்களுக்கான படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கை எந்த நேரத்திலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து வரும் படிப்பிற்கான அனுமதி விண்ணப்பங்களில் பாதி மட்டுமே இப்போது பரிசீலிக்கப்படுகிறது என்றார். இராஜதந்திர உறவுகளில் நிலைமை எவ்வாறு முன்னோக்கிச் செல்லும் என்று கூற முடியாது எனவும், அதிகளவான மாணவர்கள் நாட்டிற்கு வருவது சவாலை உருவாக்குவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். மாணவர்கள் கட்டுப்பாடில்லாமல் கனடாவுக்கு வருகிறார்கள். இதை குறைக்க வேண்டும். சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு முதல் பாதியில் இந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.