கடுமையான பனி மற்றும் காற்று தொடர்வதால், கேப் பிரெட்டன் நகராட்சி உள்ளூர் அவசர நிலையை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நகராட்சியில் அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 150 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேயர் Amanda McDougal, பனியை பாதுகாப்பாக அகற்ற பணியாளர்களை அனுமதிக்க பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். சாலையில் செல்வது பாதுகாப்பற்றது என மேயர் தெரிவித்தார்.