சஸ்காட்சுவானில் உள்ள வீட்டில் தீப்பிடித்ததில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். டேவிட்சன் சமூகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் நடந்ததாக RCMP கூறியது. மூன்று சிறுவர்களும் அவர்களது தாத்தா மற்றும் பாட்டியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். RCMP விசாரணையில் சந்தேகத்திற்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஆர்சிஎம்பி தெரிவித்துள்ளது.
தகவல் கிடைத்ததும் டேவிட்சன் தன்னார்வ தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீக்காயங்களுக்கு ஆளான 80 வயது தம்பதியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தீயை அணைத்த குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து 3 குழந்தைகளின் உடல்களை கண்டெடுத்தனர். தீ எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.