ஒட்டாவா: இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினருக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் முடிவை கனடா எடுத்துள்ளது. வேலை மற்றும் படிக்க வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க கனடா முடிவு செய்துள்ளது. வரலாற்றில் கனடா இப்படியொரு முடிவை எடுப்பது இதுவே முதல் முறை. இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்ட தற்காலிக குடியிருப்பாளர்களுக்கான விசா விதிகள் கடுமையாக்கப்படும்.
இந்த முடிவு செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்தார். அடுத்த மூன்றாண்டுகளில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை அதன் மக்கள் தொகையில் ஐந்து சதவீதமாகக் குறைக்க கனடா நகர்கிறது. இப்போது கனடாவின் மக்கள் தொகையில் ஆறரை சதவிகிதம் வெளிநாட்டினர்.