தைவான்: தைவானில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சூறாவளி தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான Kaohsiung பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியது. சுமார் 866 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு சரக்கு கப்பல் வெள்ளத்தில் மூழ்கியது. தைவான் மற்றும் பிலிப்பைன்ஸில் கேமி புயல் கரையை கடப்பதற்கு முன்பே பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. தைவானுக்கான நூற்றுக்கணக்கான விமானங்களை சீனா ரத்து செய்துள்ளது நாட்டில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.