பழைய மாண்ட்ரீல் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. வெள்ளிக்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்தில் இருந்து தீ பரவியதாக முதற்கட்ட முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மூன்று மாடி கட்டிடத்தில் முதல் தளத்தில் ஒரு உணவகம்-பார் மற்றும் மற்ற இரண்டில் வாடகை வீடுகள் உள்ளன. தீவிபத்து மர்மமாக இருப்பதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.