புளோரிடாவில் மில்டன் சூறாவளி கரையைக் கடக்கும் சாத்தியத்தை அடுத்து கனடா தனது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. புளோரிடாவின் மேற்கு-மத்திய வளைகுடா கடற்கரையில் புதன்கிழமை பிற்பகுதியில் அல்லது வியாழன் தொடக்கத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று தேசிய சூறாவளி மையம் கணித்துள்ளது. மில்டன் சூறாவளி 100 ஆண்டுகளில் இல்லாத வலிமையான சூறாவளி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய வானிலை சேவை இந்த எச்சரிக்கையை வகை 5 க்கு உயர்த்தியுள்ளது. புளோரிடா தீபகற்பத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனேடிய அரசாங்கம் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தப் புயலால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
மணிக்கு 250 கி.மீ வேகத்தில் காற்று நிலத்தை தொடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மில்டனுக்கு புளோரிடா கடற்கரையில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.