ஒரு இலை கூட இல்லாமல் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கும் செர்ரி மலர் மரங்கள், பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. டொராண்டோ ஹை பார்க்கில் இந்த ஆண்டுக்கான செர்ரி ப்ளாசம் மரங்கள் இந்த வார இறுதிக்குள் பூக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டொராண்டோ நகரம் தெரிவித்துள்ளது. செர்ரி பூக்கள் பூக்கும்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஹை பார்க்கிற்கு வருகிறார்கள். செர்ரி மலர் மரங்கள் நகரத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இடம்பெயர்ந்த ஜப்பானிய கனடியர்களை டோக்கியோ நகரம் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 1959 ஆம் ஆண்டு டோக்கியோ மக்களின் சார்பாக கனடாவுக்கான ஜப்பானிய தூதரால் ஹை பார்க்கில் உள்ள பல சகுரா மரங்கள் டொராண்டோ குடியிருப்பாளர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.
திங்கட்கிழமை முதல், வானிலையைப் பொறுத்து நான்கு முதல் 10 நாட்கள் வரை நீடிக்கும் செர்ரி ப்ளாசம் பருவத்தில் டொராண்டோவின் மிகப்பெரிய பொது பூங்காவிற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. டொராண்டோவில் செர்ரி மலரும் பருவம் பொதுவாக ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து மே மாத தொடக்கத்தில் நீடிக்கும். பூக்கள் பூக்கும் போது வெப்பநிலை குளிர்ச்சியாக இருந்தால், மக்கள் அவற்றை நீண்ட நேரம் பார்க்க முடியும். சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு வலைத்தளத்தைத் தொடர்ந்து சரிபார்க்க ஹை பார்க் இயற்கை மையம் பார்வையாளர்களை ஊக்குவிக்கிறது.