முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன் தெலுங்கானா அமைச்சரவையில் உறுப்பினராக பதவியேற்றார். ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா ராஜ்பவனில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அசாருதீன் சேர்க்கப்பட்டதன் மூலம், ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை பதினாறாக உயர்ந்துள்ளது. அமைச்சரவையின் முதல் முஸ்லிம் உறுப்பினர் அசாருதீன் ஆவார்.