மத்திய கிழக்கில் நிலவும் போர்ப்பதற்றத்தைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக, இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிசெய்யும் வகையில், இந்தியக் கடற்படை கூடுதல் போர்க்கப்பல்களை அனுப்ப உள்ளது. இந்த இந்தியப் போர்க்கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓமன் கடற்கரைப் பகுதிக்கு அப்பாலுள்ள கடல் பரப்பில் நிலைநிறுத்தப்படவுள்ளன.
இந்தியக் கொடியுடன் பயணிக்கும் கூடுதல் எரிபொருள் கப்பல்களை இந்த வழித்தடம் வழியாகச் செல்ல ஈரான் அனுமதிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், கடற்படை இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.