ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள யூத மையங்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருப்பதாக ஐரோப்பியப் பாதுகாப்பு முகமைகள் சந்தேகிக்கின்றன. ஈரானுடன் தொடர்புடைய மறைமுகக் குழுக்களே இத்தாக்குதல்களுக்குக் காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் குறித்துப் பாதுகாப்பு முகமைகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
ஈரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் மோதல்களுக்குப் பதிலடியாகவே, இந்தத் தீவைப்பு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.