ஈரானியர்களுக்கு இஸ்ரேல் ஒரு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களை அணுக வேண்டாம் என இஸ்ரேலிய இராணுவம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு சார்ந்த கவலைகளைக் காரணம் காட்டி, IDF இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
"உங்கள் பாதுகாப்பைக் கருதி, ஈரானிய நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களைப் பயன்படுத்துவதையும், ரயில் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று இராணுவம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் தெரிவித்துள்ளது.