பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்லத் திட்டமிட்டிருந்த ஒரு கும்பலைச் சேர்ந்த மூவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான அமன் திவாரி, பக்ஸார் மாவட்டத்தின் சிம்ரி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், மற்ற இரு குற்றவாளிகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.