ஈரான் போர் குறித்து போப் லியோ XIV தெரிவித்த கருத்துக்களுக்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். குற்றச் செயல்கள் மீதான போப்பின் மென்மையான நிலைப்பாட்டையும், அவரது பலவீனமான வெளியுறவுக் கொள்கையையும் டிரம்ப் கேலி செய்தார். ஈரானின் அணுசக்தி லட்சியங்கள் போன்ற அச்சுறுத்தல்களை போப் புறக்கணிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
போதைப் பொருள் கடத்தலையும், வெனிசுலாவிலிருந்து குற்றவாளிகள் ஊடுருவுவதையும் தடுக்க தான் முயன்று கொண்டிருக்கும் வேளையில், போப் தன்னை விமர்சிப்பது தவறு என்று அவர் கூறினார்.