மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால், அரசியலமைப்புத் திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்தது. மொத்தம் 528 உறுப்பினர்களில், 298 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்; 230 பேர் எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, மக்களவை சனிக்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்த மக்களவை விவாதம் மற்றும் அதற்கு அரசின் பதில் ஆகியவற்றுக்குப் பிறகு, இம்மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இது ஒரு அரசியலமைப்புத் திருத்த மசோதா என்பதால், மக்களவையில் இது நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்தன. இது, பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தக் கொண்டுவரப்பட்ட ஒரு திருத்த மசோதாவாகும்.