சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இது ஒரு தனியார் வாடகை விமானம் (chartered plane) எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜஸ்பூர் பகுதியிலுள்ள ஒரு வனப்பகுதியில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் விமானிகள் இருவர் உயிரிழந்ததாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அந்த விமானத்தில் மொத்தம் மூன்று பேர் பயணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் மிகத் தாழ்வாகப் பறந்து வந்ததாகவும், அப்போது ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.