உலகளவில் நிகழும் மரணங்களில் பெரும்பகுதி தூக்கத்தின் போது நிகழ்கின்றன. தூக்கத்தில் ஏற்படும் மரணத்திற்கான முக்கிய காரணம் திடீர் மாரடைப்பு ஆகும்.
தூக்கத்தின் போது இதயம் எதிர்பாராத விதமாக நின்றுவிடும் நிலையே இதுவாகும். 2021 ஆம் ஆண்டு ஆய்வுகளின்படி, சுமார் 22 சதவீத மாரடைப்புகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நிகழ்கின்றன. இது ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.
இதயத் தசைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. அரித்மியா என்பது இதயம் சீரற்ற முறையில் துடிக்கும் ஒரு நிலையாகும். இதயம் இரத்தத்தை முறையாகச் செலுத்தாதபோது, அது உறுப்புகளின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.
இதயச் செயலிழப்பு, சுவாசப் பிரச்சனைகள், தூக்கத்தில் ஏற்படும் சுவாசத்தடை, நரம்பு மண்டலம் தொடர்பான காரணங்கள், பக்கவாதம், வலிப்பு நோய் மற்றும் பிற உடல்ரீதியான விபத்துகள் காரணமாக தூக்கத்தில் மரணம் ஏற்படுகிறது.