உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் நிகழ்ந்த லாரி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் புதன்கிழமை மாலை நிகழ்ந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, முதலில் ஒரு காரின் மீது மோதியது. அந்த கார், தனக்கு முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தின் மீதும் மோதியது. இதனால் அந்த வாகனத்தில் தீப்பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.