மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதிகாலை வேளையில் காங்போக்பி (Kangpokpi) பகுதியில் ஏற்பட்ட வன்முறை மற்றும் தீவைப்புச் சம்பவங்களில், இளம் தம்பதியினர் உட்பட மூவர் உயிரிழந்தனர். காங்போக்பி மாவட்டத்தில் உள்ள லோலிபோல் குல்லான் (Lolibol Kullan) என்ற கிராமத்தில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏழு வீடுகளுக்குத் தீ வைத்தனர்.
தற்போது குக்கி மற்றும் நாகா சமூகத்தினரிடையே மோதல் நிலவுகிறது. இந்தத் தீவைப்புச் சம்பவங்களுக்கு ஆயுதம் ஏந்திய நாகா இனத்தவரே காரணம் என்று குக்கி சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.