ஹார்முஸ் நீரிணைக்கு அருகில், ஓமன் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பலாவு (Palau) நாட்டின் கொடியுடன் இயங்கும் இந்தக் கப்பலில் 24 இந்திய மாலுமிகள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமன் கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பல் மீதான தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலால் கப்பலின் இயந்திர அறையில் வெடிப்பு ஏற்பட்டதுடன், கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது.