கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முதல் உள்நாட்டு மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) பரிசோதனையை இந்தியா உருவாக்கியுள்ளது. இது கிராமப்புறப் பெண்களுக்கு இந்தப் பரிசோதனையை மேலும் மலிவானதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
'ட்ரூநாட் HPV-HR பிளஸ்' (Truenat HPV-HR Plus) என்று அழைக்கப்படும் இந்தப் பரிசோதனையை, கோவாவைச் சேர்ந்த 'மோல்பியோ டயக்னாஸ்டிக்ஸ்' (Molbio Diagnostics) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தப் பரிசோதனையால் அதிக ஆபத்துள்ள பல HPV வகைகளைக் கண்டறிய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் HPV பரிசோதனைகள் பெரும்பாலும் விலை உயர்ந்தவையாகவும், கிராமப்புறங்களில் கிடைக்காதவையாகவும் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்த உள்நாட்டுப் பரிசோதனை பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.