டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமூக ஊடகத் தளமான டெலிகிராம் மீது மத்திய அரசு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. பயங்கரவாதம், இணையக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், குழந்தைகள் மீதான வன்கொடுமை மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தும் ஒரு புதிய 'டார்க் வெப்' (dark web) தளமாகவே டெலிகிராம் திகழ்வதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டது.