15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தடை பொருந்தும். இந்த முடிவை ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை எடுத்துள்ளது. இதன் மூலம், இத்தகைய உறுதியான முடிவை எடுத்த முதல் வளைகுடா நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது.
2024-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குழந்தைகள் இத்தளங்களில் நாளொன்றுக்கு சுமார் மூன்று மணிநேரம் செலவிடுவது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் நீண்ட நேரம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது பதற்றம், கவனக்குறைவு, கல்விசார் சிக்கல்கள் மற்றும் சில சமயங்களில் பேச்சுத் திறன் தாமதம் உள்ளிட்ட சவால்களை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.