பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், ரயில் போக்குவரத்திற்கு ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைகிறது. இதற்கான தொடக்க விழா ஹரியானாவின் ஜிந்த் (Jind) பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த ரயில் ஜிந்த் மற்றும் சோனிபட் (Sonipat) இடையே இயக்கப்படும். இது முழுமையாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு போக்குவரத்து முறையாக அமையும்.