உக்ரைன் கடற்கரைக்கு அப்பால் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் நான்கு இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்தை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. இது குறித்து எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, ரஷ்யத் தூதரக அதிகாரியை இந்தியா செவ்வாய்க்கிழமை வரவழைத்தது. இத்தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.