வணிக ரீதியான விமானங்களில் பயன்படுத்தப்படும் விமான எரிபொருளின் (ATF) விலை தொடர்ந்து இரண்டாவது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தகவலின்படி, இந்த எரிபொருளின் விலை லிட்டருக்கு ரூ. 6.28 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இதன் விலை லிட்டருக்கு ரூ. 115-லிருந்து ரூ. 121.28-ஆக அதிகரித்துள்ளது.
விமான நிறுவனங்களின் மிகப்பெரிய செலவினங்களில் எரிபொருள் செலவும் ஒன்றாகும். இந்த விலை உயர்வு காரணமாக விமானக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும்.