சீனாவின் கிழக்கு கப்பல் போக்குவரத்து மையமான கிங்டாவோ துறைமுகத்தில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு வெளிநாட்டு சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது கப்பலில் 42 பேர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் காயமடைந்தனர், மேலும் 17 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எந்த வெடிச்சத்தமும் கேட்கவில்லை என்றும், கப்பலிலிருந்து அதிக அளவில் கருப்புப் புகை எழுவதைக் கண்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
லைபீரியக் கொடியை ஏந்திய 'ஓஷன் மெலடி' என்ற சரக்குக் கப்பலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.